Friday, January 23, 2009

வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு
இதுவரை இல்லாத அளவிற்கு பல பிரச்சினைகளோடு எதிர்பார்த்த பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பொதுக்குழு இன்று மீராப்பள்ளியில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு துவங்கும் என்று எதிர்நோக்கி சரியாக 10.30 மணிக்கு ஆரம்பித்தது. துவக்க உரையாக தற்போதைய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் சிறிது நேரம் உரையாற்றிய பின், துணை தலைவர் இஷாக் 2 வாரங்களுக்கு முன்பு நடந்தேறிய செயற்குழு தீர்மானத்தை படித்து காட்டினார்.அதன்பின்பு, மீண்டும் யூனுஸ் எதிர்வரும் ஜமாஅத் தேர்தல் குறித்தும் நிர்வாகத்தை குறித்தும் கேள்விகள் வைத்திருப்பவர்கள் பேசலாம் என்று சொன்னார். சிறிது சலசலப்பு நிலவிய நேரத்தில் மீ.மெ. மீரா உசேன் இனி வரும் புதிய தலைவரை தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்காமல் தேர்வு குழு ஒன்றை நியமித்து அதனடிப்படையில் தேர்வு செய்யலாம் என்று கருத்துகூறி அமர்ந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தவராக சேட்டு எழுந்து, இதுவரைக்கும் அப்படித்தானே நடந்து வந்தது. அதனால் அந்த முறையை மாற்றி பொதுத் தேர்தல் அடிப்படையில் தேர்வு செய்வதுதான் சிறந்தது என்று சொல்ல... அவருடன் சேர்ந்து பலர் குரல் எழுப்பி மிகுந்த சலசலப்பு ஏற்பட்ட போது, போட்டி (ஆன்டி) ஜமாஅத் துணை தலைவர் லத்தீஃப் கருத்து சொல்ல எழுந்தசமயத்தில், OAW பாவாஜான் எழுந்து 'இது இஸ்லாமிய ஜமாஅத்தின் பொதுக்குழு, எனவே இங்கு கருத்து சொல்ல விரும்புவர்கள் இந்த ஜமாஅத்தை ஆதரவளிப்பவர்களாக இருக்க வேண்டும் - அதாவது எதிர் ஜமாஅத் என்கிற அமைப்பில் அங்கம் வைப்பவர்கள் பார்வையாளராக இருந்துவிட்டு போங்கள், கருத்து சொல்ல வேண்டாம்' என்று சொன்னதுதான் தாமதம், பள்ளியின் கண்ணியம் காப்பாற்றாமல் போய்விடுமோ என்கிற அச்சம் கொள்ளும் வகையில் சலசலப்பு கூடுதலானது.இந்த சலசலப்புக்கிடையில் அப்துல் காதர் மதனி மைக் முன் நின்று பள்ளியின் கண்ணியம் குறித்தும், ஒற்றுமைக் குறித்தும் உரையாற்றத் தொடங்கிய போதுதான் அமைதி நிலவியது.

Sunday, August 17, 2008

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான உதவி தொகை1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/கல்வி உதவித்தொகை அறிவிப்புகல்வி உதவித்தொகை அறிவிப்பு(B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )கல்வி உதவித்தொகை அறிவிப்புபி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்நோக்கம்: சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்.தகுதி: நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.விதிமுறைகள்: ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும். படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும். படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்http://www.bsazakaat.org/பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008( முதலாம் ஆண்டு தொழில் நுட்ப படிப்புகள் ) ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ) ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATIONBUHARI BUILDINGNO 4 MOORES ROAD,CHENNAI 600 006PHONE : 044 4226 1100FAX : 044 2823 1950http://www.bsazakaat.ஒர்க்/E mail : admin@bsazakaat.org,bsazakaat@gmail.comதகவல் மூலம் : சமரசம் உள்ளிட்ட சமுதாய பத்திரிக்கைகள்.(நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல் என்பதாலும், பணம் வைத்துக்கொண்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிற செல்வந்தர்களுக்கு வழிகாட்டும் என்பதாலும் இத்தகவல் வெளியிடப்படுகிறது. மேல் விபரங்களுக்கு நமதூர் கல்விக்குழுவை அணுகவும்)இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்!ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.